ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் நேற்று அமலாக்கத்துறை அதிகாரிகள் முன்பு ஆஜரானார். காலை அவரிடம் தொடங்கிய விசாரணை சுமார் 6.30 மணியளவில் முடிந்தது. விசாரணையின் போது, முறைகேடு குறித்து பல கேள்விகளை ப சிதம்பரத்திடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் கேட்டதாக தெரிகிறது. இதே வழக்கில், இன்றும் சி.பி.ஐ., முன் சிதம்பரம் ஆஜரானார்.
டெல்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரான ப.சிதம்பரத்திடம் சிபிஐ அதிகாரிகள் சுமார் 6 மணி நேரம் விசாரணை நடத்தினர். இன்று அந்த விசாரணை நிறைவு அடைந்தது.