முதலமைச்சர் பழனிசாமி மணிமுத்தாறு அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விட உத்தரவு!

Default Image

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி,நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விட  உத்தரவிட்டுள்ளார்.

அம்பாசமுத்திரம் வட்ட வேளாண் பெருங்குடி மக்களின்  கோரிக்கையை ஏற்று நேரடி, மறைமுக பாசனப் பகுதிகளுக்கு கார் பருவ சாகுபடிக்கு வரும் 8-ஆம் தேதி முதல் செப்டமர் 20 வரை நீர் திறக்க உத்தரவிட்டுள்ளதாக அவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

105 நாட்களுக்கு 554 புள்ளி 25 மில்லியன் கன அடிக்கு மிகாமலும், நீர் இருப்பு மற்றும் நீர் வரத்தை பொறுத்து தேவைக்கு ஏற்பவும் தண்ணீர் திறந்துவிட உத்தரவிட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இதன் மூலம் அம்பாசமுத்திரம் வட்டத்தில் உள்ள 2 ஆயிரத்து 756 புள்ளி 82 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்று தெரிவித்துள்ள அவர், விவசாயிகள் நீர் மேலாண்மை மூலம் நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்