விவசாய சங்க பிரதிநிதிகள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் சந்திப்பு!

Default Image

முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமியை, காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்று குழு ஆகிய அமைப்புகளை அமைத்து மத்திய அரசின் அரசிதழில் வெளியிட நடவடிக்கை எடுத்தமைக்காக, விவசாய சங்கங்களின் நிர்வாகிகள் தலைமைச் செயலகத்தில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

உச்சநீதிமன்ற இறுதித்தீர்ப்பின்படி, காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் ஒழுங்காற்று குழு அமைக்கப்பட்டு, கடந்த ஒன்றாம் தேதி, மத்திய அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டது… தமிழ்நாடு அரசு மேற்கொண்ட தொடர் சட்டப் போராட்டங்களுக்கு கிடைத்த வெற்றி இதுவாகும். இதனையடுத்து, தமிழ்நாடு காவிரி நீர்பாசன விளைபொருட்கள் விவசாயிகள் நல உரிமை பாதுகாப்பு சங்கத்தின் பொதுச்செயலாளர் காவிரி எஸ்.ரங்கநாதன் தலைமையில், டெல்டா மாவட்டத்தின் பல்வேறு விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள், முதலமைச்சரை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்