ஜம்மு காஷ்மீரில் நடைமேம்பாலம் இடிந்து விழுந்து விபத்து; 80 பேர் படுகாயம்.!
ஜம்மு காஷ்மீரின் உதம்பூரில் பைசாகி கொண்டாட்டத்தின் போது, நடைமேம்பாலம் இடிந்து விழுந்ததில் 80 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் உதம்பூர் மாவட்டத்தில், பெயின் கிராமத்தில் உள்ள பெனிசங்கத்தில் பைசாகி கொண்டாட்டத்தின் போது, மிகப்பெரும் நடைமேம்பாலம் இடிந்து விழுந்து, விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் குழந்தைகள் உட்பட 80 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
பாலம் இடிந்து விழுந்தபோது, அந்த பாலத்தில் ஏராளமானோர் இருந்ததால், பாரம் தாங்காமல் இடிந்து விழுந்ததாகவும், எழும் இந்த விபத்தில் எந்தவித உயிரிழப்பும் ஏற்படவில்லை என ஜம்மு பிரதேச ஆணையர் ரமேஷ் குமார் தெரிவித்தார். செனானி நகராட்சி தலைவர் மாணிக் குப்தா, இந்த விபத்து குறித்து கூறும்போது, 20-25 பேர் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளனர். இதில் 6-7 பேரை மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளோம்.
இந்த சம்பவம் குறித்து அறிந்ததும், மத்திய அமைச்சரும், உதம்பூர் எம்பியுமான ஜிதேந்திர சிங், நாங்கள் உள்ளூர் நிர்வாக அதிகாரிகளுடன் தொடர்பில் இருக்கிறோம், தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.
#WATCH | J&K: A footbridge collapsed during the Baisakhi celebration at Beni Sangam in Bain village in Udhampur’s Chenani Block
Six people were injured during the incident. A rescue operation is underway. Police and other teams have reached the site: Dr Vinod, SSP Udhampur… pic.twitter.com/2jGn1QxLpX
— ANI (@ANI) April 14, 2023