திராவிடக்கொள்கைகள் இந்தியா முழுதும் பரவிவருகிறது; முதல்வர் ஸ்டாலின் பேச்சு.!

Default Image

திராவிடக் கொள்கைகள் இந்தியா முழுவதும் பரவி வருவதாக, சென்னையில் நடைபெற்ற இஃப்தார் நோன்பு நிகழ்ச்சியில் முதல்வர் பேச்சு.

சென்னையில் திமுக சார்பில் நடைபெற்ற இஃப்தார் நோன்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றி வந்தார். அப்போது அவர் பேசுகையில், சமூகநீதி, சகோதரத்துவம், சமதர்ம கொள்கைகளை ஏற்று அதன்படி நாடு முழுவதும் உள்ள சக்திகள் ஒன்று சேரவேண்டும், இது வெறும் தேர்தலுக்காக மட்டும் அல்லாமல் இந்தியாவின் எதிர்காலத்திற்காக இனைய வேண்டும் என்று கூறியுள்ளார்.

திராவிடக் கொள்கைகள் நாடு முழுவதும் பரவி வருகிறது, நமது இந்தியாவை காப்பாற்றும் ஆற்றல் சமூகநீதி, சகோதரத்துவம், சமதர்மம் ஆகிய 3 கருத்தியலுக்கு தான் இருக்கிறது. மேலும் சிறுபான்மையினருக்காக பல நலத்திட்டங்கள், கோரிக்கைகள் வைக்காமலேயே நமது திமுக ஆட்சியின் கீழ் நிறைவேற்றப்பட்டுள்ளன.

கோரிக்கை வைக்காமலே செய்யும் நமது அரசு, கோரிக்கை வைத்தால் செய்யாமல் இருக்குமா? நிச்சயம் உங்களது கோரிக்கைகளை நிறைவேற்றும் என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்