அண்ணாமலை வெளியிடும் பட்டியலுக்காக காத்துக்கொண்டிருக்கிறோம் – டிகேஎஸ் இளங்கோவன்

Default Image

பணக்காரர்களுக்காகவே பாஜக ஆட்சி நடத்தி வருகிறது என திமுக செய்தித் தொடர்புத் தலைவர் டிகேஎஸ் இளங்கோவன் பேட்டி.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய திமுக செய்தித் தொடர்புத் தலைவர் டிகேஎஸ் இளங்கோவன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிடும் ஊழல் பட்டியலுக்காக காத்துக்கொண்டிருக்கிறோம். இபிஎஸ், ஓபிஎஸ், முன்னாள் அமைச்சர்கள் சொத்துப் பட்டியலையும் அண்ணாமலை வெளியிட வேண்டும். பணக்காரர்களுக்காகவே பாஜக ஆட்சி நடத்தி வருகிறது என என்றார்.

இதன்பின் பேசிய அவர், மீண்டும் முதலமைச்சராவேன் என எடப்பாடி பழனிசாமி சொன்னால்தான் அவருடன் உள்ளவர்கள் இருப்பார்கள், இல்லையெனில் ஓ.பன்னீர்செல்வத்திடம் சென்று விடுவார்கள். எடப்பாடி பழனிசாமிக்கு எந்த சட்டமும் தெரியாது என்று நினைக்கிறேன். எஸ்.ஆர் பொம்மை வழக்கிற்கு பிறகு எந்த சட்டமன்றமும் கலைக்கப்படவில்லை. இபிஎஸ் தன்னிடம் உள்ளவர்களை தக்க வைத்துக்கொள்ள ஏதோ ஏதோ பேசி வருகிறார்.

நாங்களே ஆட்சியைக் கலைத்தால்தான் நாடாளுமன்றத் தேர்தலுடன் சட்டமன்ற தேர்தல் வரும். அடுத்தாண்டு ஒரே நாடு ஒரே தேர்தல் வருகிறது என்றால் தற்போது எதற்கு கர்நாடகாவில் தேர்தல்? என கேள்வி எழுப்பியுள்ளார். எனவே ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமில்லை என  கூறிய அவர், இன்று நடைபெறுவது அரசியல் மாநாடல்ல சமூக நீதிக்கான மாநாடு என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்