காவிரி மேலாண்மை ஆணையம்:அன்பரசு மற்றும் சண்முகசுந்தரம் ஆகிய இருவர் நியமனம்! முதல்வர் நாராயணசாமி

Default Image

காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு புதுச்சேரி மாநில அதிகாரிகளாக புதுச்சேரி மாநில நீர்வளத்துறை செயலர் அன்பரசு மற்றும் பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் சண்முகசுந்தரம் ஆகிய இருவரை நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என்று  புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

முன்னதாக  காவிரி மேலாண்மை ஆணையத்துக்கான தமிழக உறுப்பினர்களாக பொதுப்பணி முதன்மை செயலர் எஸ்.கே.பிரபாகர், நீர்வளத்துறை தலைமை பொறியாளர் செந்தில்குமார் ஆகியோர் பெயர் பரிந்துரைக்கப்பட்டது.

காவிரி மேலாண்மை ஆணையம் அமைப்பது தொடர்பான அறிவிப்பு அரசிதழில் வெளியீடப்பட்டது. நீர்வளத்துறை அமைச்சக அனுமதியை தொடர்ந்து, மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது.

காவிரி மேலாண்மை ஆணையத்திற்கான அறிவிப்பு மத்திய அரசிதழில் வெளியீட மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது.

இதேபோல் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கும் உத்தரவில் கையெழுத்திட்டார் அமைச்சர் நிதின் கட்கரி. ஆணையத்தின் தற்காலிக தலைவராக நீர்வளத் துறை செயலாளர் யு.பி.சிங் செயல்படுவார். ஆணையத்திற்கு நிரந்தர தலைவர் நியமனம் குறித்து விரைவில் அறிவிப்பு என தகவல் தெரிவித்துள்ளனர்.இந்நிலையில் காவிரி மேலாண்மை ஆணையத்திற்கான அறிவிப்பு மத்திய அரசிதழில் மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது.

கடந்த 18-ஆம் தேதி அன்று தென்மேற்கு பருவமழைக் காலம் தொடங்கும் முன்னரே காவிரி வரைவு செயல் திட்டத்தை அரசிதழில் வெளியிட்டு, காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டுமென மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை செயல்படுத்த, மத்திய அமைச்சரவையை கூட்டி அதன் ஒப்புதலை பெற்று, அரசிதழில் வெளியிட வேண்டும். அதன்பிறகு தான் காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்