பள்ளிகளில் தானியங்கி மணி, ப்ரத்யேக சீருடை; பட்ஜெட்டில் அறிவிப்பு.!

Default Image

பள்ளிகளில் தானியங்கி மணி, மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு ப்ரத்யேக சீருடை என முக்கிய திட்டங்களை பட்ஜெட்டில் மேயர் பிரியா  அறிவித்துள்ளார்.

சென்னை மாநகராட்சியின் 2023-24-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை, இன்று சென்னை மேயர் ப்ரியா தாக்கல் செய்தார். தமிழ்தாய் வாழ்த்துடன் தொடங்கிய கூட்டத்தில், மேயர் பிரியா தனது பட்ஜெட் அறிவிப்பை வெளியிட்டார்.

இந்த பட்ஜெட் அறிவிப்பில் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் தானியங்கி மணிகள் அமைக்கப்படும் எனவும் இதற்காக சுமார் ரூ.27 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி மேயர் பிரியா அறிவித்துள்ளார்.

மேலும் தூய்மை பணியாளர்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட சீருடைகள் வழங்கப்படும் எனவும், அவை இரவில் ஒளிரும் வகையில் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்