சாவர்க்கர் குறித்த ராகுல் காந்தியின் சர்ச்சை கருத்து – நாடாளுமன்றத்தில் போராட்டம்.!

Default Image

சாவர்க்கர் குறித்த ராகுல் காந்தியின் சர்ச்சை கருத்துக்கு பாஜக எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் போராட்டம். 

2019 பொதுத்தேர்தல் பரப்புரையில், எல்லா திருடர்களுக்கும் மோடி என்ற பெயர் இருக்கிறது என மோடி குறித்து அவதூறாக பேசிய வழக்கில், ராகுல் காந்தியை சூரத் நீதிமன்றம் குற்றவாளியாக அறிவித்துள்ளதோடு, 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்து இருந்தது.

2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், ராகுல் காந்தியை எம்.பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்து மக்களவை செயலகம் அறிவித்தது. இதனை தொடர்ந்து, அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையில், கடந்து சனிக்கிழமை டெல்லி காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் வைத்து ராகுல் காந்தி செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்,  இந்திய ஜனநாயகத்திற்காக நான் போராடி வருகிறேன், சிறை தண்டனை, தகுதி நீக்கத்தை பார்த்து ஒருபோதும் நான் பயப்பட மாட்டேன். என்னைப் பற்றி இவர்களுக்கு இன்னும் சரியாக புரியவில்லை.

பிரதமர் மோடிக்கும் அதானிக்கும் இடையேயான உறவு குறித்து நான் நாடாளுமன்றத்தில் கேள்விகள் கேட்டேன். அப்போது, அதானி பற்றி நான் பேசுவதை கண்டு பிரதமர் மோடி பயப்படுவதை அவரது கண்களில் பார்க்கின்றேன். “மன்னிப்பு கேட்க நான் சாவர்க்கர் அல்ல… நான் காந்தி” என்று பரபரப்பு பேட்டியை கொடுத்தார் ராகுல்காந்தி.

தற்போது, சாவர்க்கர் குறித்து ராகுல் காந்தி கூறிய சர்ச்சை கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, மகாராஷ்டிர மாநில பாஜக எம்பிக்கள், நாடாளுமன்றத்தில் உள்ள சிவாஜி சிலை முன் போராட்டம் நடத்த உள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்