சென்னையில் இருந்து கோவைக்கு வெறும் 6 மணிநேரம் தான்.! பிரதமர் துவங்கி வைக்கும் வந்தே பாரத் ரயில் சேவை…

Default Image

சென்னையில் இருந்து கோவைக்கும், கோவையில் இருந்து சென்னைக்கும் 6 மணி நேரத்தில் பயணிக்கும் வகையில் வந்தே பாரத் ரயில் ரயில் சேவை ஏப்ரல் 8ஆம் தேதி முதல் இயக்கப்பட உள்ளது . 

நாடுமுழுவதும் பல்வேறு மாநிலங்களில் வந்தே பாரத் ரயில் சேவை துவங்கப்பட்டு செயல்பாட்டில் இருக்கிறது. இந்த ரயில் சேவை மூலம் மற்ற ரயில்சேவையை விட விரைவாக பயணம் மேற்கொள்ளலாம்.

தமிழகத்தில் வந்தே பாரத் ரயில் :

இந்த ரயில் சேவை தற்போது சென்னை – கோவை இடையே செயல்பட உள்ளது . அதற்கான  இறுதி கட்ட பணிகள் நிறைவு பெற்று, ஏப்ரல் 8ஆம் தேதி வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி துவங்கி வைக்க உள்ளார் .

ரயில் நேரம் :

சேலம் திருப்பூர் உள்ளிட்ட 5 இடங்களில் நின்று சென்னை கோவை இடையே வந்தே பாரத் ரயில் சேவை இயங்க உள்ளது . கோவையில் இருந்து காலை 6 மணிக்கு இயக்கப்படும் ரயில் மதியம் 12.30க்கு சென்னைக்கும் , சென்னையில் இருந்து மதியம் 2 மணிக்கு புறப்படும் ரயில் இரவு 8 மணிக்கு கோவைக்கும் செல்லும் எனவும் புதன் கிழமை வந்தே பாரத் ரயில் சேவை இந்த வழித்தடத்திற்கு இல்லை எனவும் தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்