#Breaking : பரபரப்பு…டெல்லியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..! 6.5 ரிக்டர் அளவில் பதிவு..!

புதுடெல்லியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

தேசிய தலைநகர் டெல்லி மற்றும் அதை ஒட்டிய தேசிய தலைநகர் பிராந்தியத்தில் (NCR) இன்று (21 ஆம் தேதி) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 6.5 ரிக்டர் ஆக பதிவாகியுள்ளது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தின் மையமான ஆப்கானிஸ்தானின் ஜுர்ம்மில் 187.6 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. மேற்கு உத்தரபிரதேசத்தின் அண்டை நகரங்களில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. மேலும் அண்டை நாடான பாகிஸ்தானிலும் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் லாகரா மற்றும் இஸ்லாமாபாத் நகரங்களில் உணரப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

author avatar
செந்தில்குமார்
நான் செந்தில்குமார், எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்கிறேன். செய்தி ஊடகத்தின் மீதான ஆர்வத்தினால், ஒரு வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். டெக்னாலஜி, க்ரைம், விளையாட்டு, தமிழ்நாடு முதல் உலக செய்திகள் வரை அனுபவம் உள்ளது.

Leave a Comment