2 ஆண்டுகளில் 1.5 லட்சம் மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது – அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

இதுவரை ரூ. 723 கோடி பயிர்க்காப்பீடு இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவிப்பு. 

நேற்று 2023-24-ஆம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இன்று அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம்  அவர்கள், தமிழக வேளாண் பட்ஜெட்டை சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். தோளில் பச்சை துண்டு அணிந்து வந்து வேளாண் பட்ஜெட்டை வாசித்து வருகிறார்.

2 ஆண்டுகளில் 1.5 லட்சம் மின் இணைப்புகள்

இந்த வேளாண் சம்பந்தப்பட்ட பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், டெல்டா மாவட்டங்களில் 5.36 லட்சம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் வேளாண் பரப்பளவு 1.93 லட்சம் ஹெக்டேர் அதிகரித்துள்ளது. 2 ஆண்டுகளில் 1.5 லட்சம் மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. இதுவரை ரூ. 723 கோடி பயிர்க்காப்பீடு இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

Leave a Comment