பிரேசில் மனாஸில் கனமழை; நிலச்சரிவில் சிக்கி 8 பேர் பலி.!

Default Image

பிரேசிலின் மனாஸ் நகரில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

பிரேசிலின் மனாஸ் நகரில் பெய்துவரும் கனமழையால் அங்கு நிலச்சரிவு ஏற்பட்டது, இதனால் 4 குழந்தைகள் உட்பட 8 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். மண்சரிவினால் மாநிலத்தின் தலைநகரின் கிழக்குப் பகுதியில் 11 வீடுகள் புதைந்தன.

மீட்புக்குழுவினர் தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர், மீட்புப்பணியில் உயிருடன் மீட்கப்பட்ட ஒருவர் சிறிது நேரத்திற்கு பிறகு உயிரிழந்தார். மேலும் உயிரிழந்தவர்களில் நான்கு பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரேசிலில் வெளியான புள்ளிவிவரத்தின் அடிப்படையில் மனாஸ் நகரில் 96 மி.மீ மழை பெய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது சராசரியை விட மிக அதிகமாக இருந்தது, இதன் விளைவாக நிலத்தில் தண்ணீர்  நிரம்பி மலைப்பகுதிகளில் அதிக மண் சரிவு ஏற்பட்டது. மலைப்பகுதியில் இருந்த வீடுகளில் மண் சரிவு ஏற்பட்டு வீடுகள் புதைந்ததாக தெரிவிக்கப்பட்டன.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்