இன்று கடலூரில் பாமக சார்பில் முழு அடைப்பு போராட்டம்..!

Default Image

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடலூரில் முழு அடைப்பு போராட்டம்

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், கடலூர் மாவட்ட உழவர்களின் நிலங்களை பறிக்கும் என்எல்சி நிறுவனத்தையும், அதற்கு துணையாக செயல்படும் மாவட்ட நிர்வாகத்தையும் கண்டித்து, இன்று கடலூர் மாவட்ட பாமக சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளார்.

என்எல்சிக்கு எதிரான முழு அடைப்பு போராட்டத்திற்கு வணிகர்கள் முழு ஆதரவு அளிக்க வேண்டும். உழவர்களையும், பொதுமக்களையும் கிள்ளுக்கீரையாக கருதும் என்எல்சிக்கு பாடம் புகட்ட வேண்டும். பொதுமக்கள், இளைஞர்கள், மாணவச்செல்வங்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் முழுமையான ஆதரவு அளிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதற்கிடையில், கடலூர் ஆட்சியர் பாலசுப்ரமணியன் இன்று வழக்கம்போல பேருந்துகள், கடைகள் வழக்கம் போல இயக்கம் என்றும், காவல்துறை மூலம் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்