வடமாநில தொழிலாளர்கள் விவகாரம்.! பீகார் முதல்வருடன் திமுக எம்பி டி.ஆர்.பாலு சந்திப்பு.!

வடமாநில தொழிலாளர்கள் விவகாரம் தொடர்பாக பீகார் முதல்வர் நிதிஷ்குமாரை நேரில் சந்தித்து ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார் திமுக எம்பி டி.ஆர்.பாலு. 

தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக பொய்யான வதந்திகள் அண்மையில் பரவியதால் வடமாநிலத்தவர்கள் வேலை செய்யும் பல்வேறு இடங்களில் பதற்றமான சூழ்நிலை நிலவியது. இதனை கட்டுக்குள் கொண்டு வர அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. வதந்திகளை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கைகளை மேற்கொன்டு வருகிறது.

ஏற்க்கனவே, பீகார் அரசு தங்கள் ஆய்வு குழுவை தமிழகத்திற்கு அனுப்பி வைத்து, இங்குள்ள பீகார் மாநிலத்தவர்களிடம் அங்குள்ள சூழ்நிலை குறித்து ஆராய்ந்தனர். அதே போல ஜார்கண்ட் மாநிலத்தின் சார்பாகவும் ஒரு குழுவினர் வந்து இங்கே முகாமிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

இதனை தொடர்ந்து, தமிழத்தில் வடமாநிலத்தவர்கள் நலமுடன் இருப்பதாக கூறி சென்றனர். தற்போது, தமிழக அரசு சார்பு பிரதிநிதியாக திமுக எம்பி டி.ஆர்.பாலு, பீகார் முதலவர் நிதிஷ்குமாரை நேரில் சந்தித்து ஆலோசித்து வருகிறார். தமிழகத்தில் வாழும் பீகார் மாநில தொழிலாளர்கள் நலன் பற்றி இந்த ஆலோசனை கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment