திமுக வெறுப்பு பிரச்சாரத்தை செய்யாது.. பொதுச்செயலாளர் துரைமுருகன் பேட்டி!

Default Image

ஈரோடு வெற்றியை திசைதிருப்ப வட மாநில தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரப்புகின்றனர் என துரைமுருகன் பேட்டி.

திருச்சியில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர் மற்றும் பொதுச்செயலாளருமான துரைமுருகன், திமுக எப்போதும் வெறுப்பு பிரச்சாரத்தை செய்யாது, விருப்பு பிரச்சாரத்தை தான் செய்யும். இடைத்தேர்தலில் திமுக கூட்டணி வெற்றியை பொறுத்து கொள்ள முடியாமல் திசை திருப்பும் செயல் நடைபெறுகிறது.

காவிரி, குண்டாறு இணைப்பு திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முனைப்பு காட்டவில்லை, வடமாநில தொழிலாளர்கள் விவகாரத்தில் சிறுபிள்ளைத்தனமாக சிலர் வதந்தி பரப்புகின்றனர் எனவும் குறிப்பிட்டார். அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டங்களை திமுக அரசு தற்போதும் செயல்படுத்தி வருகிறது.

ஈரோடு வெற்றியை திசைதிருப்ப வட மாநில தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரப்புகின்றனர். திமுகவை பொறுத்தவரை கூட்டணி தர்மத்தை கடைபிடிப்போம், திமுக ஆட்சியை அகற்ற சதி நடக்கிறது என முதலமைச்சர் பேசியது குறித்த கேள்விக்கு, என்னைவிட முதல்வருக்கு அதிக செய்திகள் தெரியும் என பதிலளித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்