வடமாநிலத் தொழிலாளர்களை சந்தித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்..!
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், நாகர்கோவிலில் கையுறை தயாரிக்கும் புலப்பெயர் தொழிலாளர்களை சந்தித்து பேசியுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன், திருப்பூர் ரயில் நிலையத்தில் வதந்தியால் திடீரென்று வட மாநிலத்தவர்கள் அங்கு குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பீகார் தொழிலாளி சஞ்சய் குமார் என்பவர் கொலை செய்யப்பட்டதாக வதந்தி பரவியது. இது தற்போது அரசியல் வட்டாரத்தில் பேசும்பொருளாகி உள்ளது.
இந்த நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், நாகர்கோவிலில் கையுறை தயாரிக்கும் புலப்பெயர் தொழிலாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அவர்களிடம் தங்களுக்கு உள்ள குறைகளை கேட்ட அறிந்துள்ளார். அப்போது வதந்திகளை நம்பாமல் தைரியமாக இருக்க வேண்டும் என தொழிலாளர்களிடம் அறிவுறுத்தியுள்ளார்.