தாக்குதல்கள் எதிர்காலத்தில் எப்படியும் வரலாம்; தயாராக இருங்கள்- ராஜ்நாத் சிங்
எதிர்கால தாக்குதல்கள் கணிக்க முடியாததாக இருக்கும். எதற்கும் தயாராக இருங்கள் என்று ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
ஐஎன்எஸ் விக்ராந்த், மாநாடு: கோவா கடற்கரையில் கடற்படை சார்பாக உள்நாட்டு விமானம் தாங்கி கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்தில் மாநாட்டை தொடங்குகிறது, இந்த மாநாட்டில் முதன்முறையாக தொடங்கிவைத்து பேசிய மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், கடற்படை அதிகரிகளிடம் எதிர்கால மோதல்கள் கணிக்க முடியாததாக இருக்கும்.
வடக்கு மற்றும் மேற்கு எல்லைகளிலும், முழு கடற்கரையிலும் தொடர்ந்து கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். எதிர்காலத்தில் ஏற்படும் அனைத்து சவால்களையும் எதிர்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும். அதிகரித்து வரும் அச்சுறுத்தல்களை திறம்பட எதிர்க்கும் வகையில், ஆயுதப்படைகள் எதிர்கால திறன்களை வளர்ப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.
சீன, பாகிஸ்தான் எல்லை: அதே நேரத்தில் கடற்கரையோரங்களிலும் சீனா மற்றும் பாகிஸ்தான் எல்லைகளிலும் அதிக பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்று கூறினார். சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றத்தை உறுதி செய்வதற்கு எல்லைகளை பாதுகாப்பது அவசியம். பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் இந்தியா, அம்ரித் காலில் குறிப்பிடத்தக்க வகையில் முன்னேறி வருவதாகவும் ராஜ்நாத் சிங் கூறினார்.
சீனாவும் இந்தியாவும் கடந்த 3-4 ஆண்டுகளில் குறிப்பாக லடாக் மற்றும் அருணாச்சல பிரதேசத்தில் இரண்டு முறை எல்லையில் மோதல்களில் ஈடுபட்டுள்ளன. ஜம்மு காஷ்மீர் மற்றும் கேரளா போன்ற எல்லை மாநிலங்களில் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் சில தந்திர வேலைகளில் ஈடுபடுவதாக கிடைத்த உளவுத்துறை தகவலின்படி, அவற்றை எதிர்கொள்ளும் உத்திகளும் நாம் வைத்துக்கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.