கருணாநிதியின் முழு உருவ சிலையை திறந்து வைத்தார் முதலமைச்சர்!
நாகர்கோவில் ஒழுகினசேரியில் திமுக அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் சிலையை திறந்து வைத்தார் முதலமைச்சர்.
நாகர்கோவிலில் உள்ள குமாரி மாவட்ட திமுக அலுவலகத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி முழு உருவ சிலையை முதலமைச்சர் திறந்து வைத்தார். அதன்படி, 6.5 அடி உயர பீடத்தில் 8.5 அடி உயரமுள்ள வெண்கலத்தாலான கலைஞர் கருணாநிதியின் முழு உருவ சிலையை முதலமைச்சர் திறந்து வைத்தார்.
மேலும், நாகர்கோவில் மாநகராட்சியின் புதிய அலுவலக கட்டடமான கலைவாணர் மாளிகையையும் திறந்து வைத்தார். நாகர்கோவிலில் ரூ.10.50 கோடி மதிப்பிலான 4 மாடிகள் கொண்ட, நவீன வசதிகளுடன் கூடிய புதிய மாநகராட்சி கட்டடம் திறந்து வைத்தார் முதலமைச்சர் என்பது குறிப்பிடத்தக்கது.