நாம் தமிழர் ஆதி தமிழர் மோதல் – 8 பேர் கைது

Default Image

சென்னை போரூரில் ஏற்பட்ட மோதல் விவகாரத்தில் நாம் தமிழர் கட்சி, ஆதித்தமிழர் கட்சியை சேர்ந்த தலா 4 பேர் கைது 

சென்னை போரூரில் உள்ள நாம் தமிழர் கட்சி அலுவலகம் மீது கற்கள் மற்றும் பாட்டில்கள் வீசப்பட்டுள்ளது. நாம் தமிழர் கட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆதித்தமிழர் பேரவையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அருந்ததியினர் மக்களை சீமான் தவறாக பேசியதாக, அக்கட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில், நாம் தமிழர் கட்சி, ஆதித்தமிழர் பேரவையினர் மாறி மாறி தாக்கிக்கொண்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

கைது

இந்த தாக்குதலில், நாம் தமிழர் கட்சி அலுவலகத்தின் கண்ணாடிகள் உடைந்து சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, நாம் தமிழர் கட்சி, ஆதித்தமிழர் கட்சியை சேர்ந்த தலா 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்