சீனாவின் அச்சுறுத்தல் ஜெய்சங்கருக்கு புரியவில்லை- ராகுல்காந்தி.!

Default Image

சீனாவின் உண்மையான அச்சுறுத்தல், இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு புரியவில்லை என ராகுல் காந்தி கூறியுள்ளார்.

காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி லண்டனில் நடைபெற்ற இந்திய பத்திரிக்கையாளர் சங்க கூட்டத்தில் பேசும் போது, இந்திய எல்லைக்குள் யாரும் நுழையவில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியது, அவர் சீனாவின் அச்சுறுத்தலைப் புரிந்து கொள்ளவில்லை என்பதை நிரூபிக்கிறது என்று கூறினார்.

இந்தியா எதிர்கொள்ளும் இராணுவ அச்சுறுத்தல்கள் குறித்து ராகுலிடம் கேட்டபோது, ராணுவ அச்சுறுத்தல்களை நீங்கள் இராணுவ ரீதியாக எதிர்கொள்ள வேண்டும். ஆனால் அச்சுறுத்தலின் தன்மையை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும், மேலும் அச்சுறுத்தலின் தன்மைக்கு நீங்கள் பதிலளிக்க வேண்டும்.

இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் நான் உரையாடினேன், அவருக்கு சீனாவின் அச்சுறுத்தல் புரியவில்லை, மோடி இந்தியாவிற்குள் யாரும் நுழையவில்லை என கூறுவது சீனாவை மீண்டும் இந்தியாவிற்குள் அத்துமீறி நுழைய அழைப்பது போல் இருப்பதாக அவர் மேலும் கூறினார்.

சீனா மீதான காங்கிரஸின் கொள்கை குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, எங்கள் எல்லைக்குள் நுழைந்து எங்களை கொடுமைப்படுத்துவதை கட்சி ஏற்காது என்று கூறினார். அவர்கள் யாராக இருந்தாலும் பரவாயில்லை, அது எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாதது. சீனர்கள் நமது எல்லைக்குள் நுழைந்து நமது ராணுவ வீரர்களைக் கொன்றதை பிரதமர் மறுத்துள்ளார் என ராகுல் காந்தி தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்