இந்தோனேசியாவில் நிலச்சரிவு; 11 பேர் பலி.!
இந்தோனேசியாவின் நதுனா பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் 11 பேர் பலியாகியுள்ளனர், 50க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை.
இந்தோனேசியாவின் நதுனா பகுதியில் கனமழை பெய்ததால் ஏற்பட்ட நிலச்சரிவில் 11பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 50க்கும் மேற்பட்டோர் காணவில்லை என பேரிடர் அதிகாரிகள் தெரிவித்தனர். நதுனாவில் உள்ள செராசன் கிராமத்தில் கனமழையினால் நிலச்சரிவு ஏற்பட்டதால் வீடுகளைச்சுற்றியுள்ள மலைகளில் இருந்து டன் கணக்கில் மண் விழுந்து சரிந்தது.
இதில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்ட மீட்புக்குழுவினர் இதுவரை 11 உடல்களை மீட்டுள்ளனர் இன்னும் பலி எண்ணிக்கை உயரலாம் என்று தேசிய பேரிடர் தணிப்பு முகமையின் அதிகாரிகள் கூறியுள்ளதாக தகவல் வெளியானது. மேலும் 50 க்கும் மேற்பட்டோர் காணவில்லை என அதிகாரிகள் கணக்கிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஆயிரக்கணக்கான தீவுகளைக் கொண்டுள்ள இந்தோனேசியாவில் பருவகால மழையால் அடிக்கடி நிலச்சரிவுகள் மற்றும் வெள்ளம் ஏற்படுகிறது, அங்கு மில்லியன் கணக்கான மக்கள் மலைப்பகுதிகளில் வாழ்கின்றனர். தேடுதலில் காவல்துறை மற்றும் மீட்புக்குழு ஈடுபட்டுவருகின்றனர்.