சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மீண்டும் ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு நடைமுறை.!
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இனி ஒலிபெருக்கி மூலமாக அறிவிப்பு தெரிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கடந்த ஒருவாரமாக ரயில்கள் பற்றிய அறிவிப்பு ஒலிபெருக்கி வாயிலாக அல்லாமல் திரையில் அமைதியாக அறிவிக்கப்பட்டு வந்தது. ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கப்படுவதால் ஒலி மாசு அடைவதாக பயணிகள் புகார் கூறப்பட்டு வந்த நிலையில், சோதனை முயற்சியாக கடந்த ஒருவாரம் இவ்வாறு அமைதி ரயில் நிலையமாக செயல்பட்டு வந்தது.
இந்த நிலையில் இந்த அறிக்கை மீண்டும் திரும்பபெறப்பட்டுள்ளது, இதன்மூலம் இனி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஒலிபெருக்கி மூலமாகவே ரயில்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.