ஸ்டெர்லைட் போராட்டத்தில் போராடியவர்கள் வேறு, கலவரத்தில் ஈடுபட்டவர்கள் வேறு!மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்

Default Image

ஸ்டெர்லைட் போராட்டத்தில் போராடியவர்கள் வேறு, கலவரத்தில் ஈடுபட்டவர்கள் வேறு என்று  நெல்லையில் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டியளித்துள்ளார்.   தமிழகத்தில் சட்டம், ஒழுங்கைவிட பயங்கரவாதம் அதிகரித்து உள்ளது.

இதேபோல் இன்று  சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழகத்தில் பயங்கரவாதிகளை கண்டுபிடித்து தண்டிக்க வேண்டும் என குரல்கொடுக்க திமுக தயங்குவது ஏன்? என்றார். சட்டமன்றத்திற்கு செல்லாததன் மூலம், ஸ்டெர்லைட் போராட்டம் தொடர்பான விவாதத்தை திமுக மழுங்கடித்துவிட்டதாகவும் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டினார்.

தமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவல் பற்றி நடிகர் ரஜினிகாந்த் யாருடைய தூண்டுதலிலும் பேசவில்லை என்றும், மக்களின் குரலாக ஒலித்திருக்கிறார் என்றும் அவர் குறிப்பிட்டார். ராஜராஜ சோழன், உலகமா தேவி சிலைகளை மீட்ட ஐ.ஜி. பொன்.மாணிக்கவேலுக்கு அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்