அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை ஏற்றுக்கொள்ள கூடாது.! தேர்தல் ஆணையத்துக்கு ஓபிஎஸ் கடிதம்.!

Default Image

அதிமுக பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானங்களையும், கட்சி விதிகளில் செய்யப்பட்ட மாற்றங்களையும் ஏற்றுக்கொள்ள கூடாது. – தேர்தல் ஆணையத்திற்கு ஓபிஎஸ் கடிதம்.

கடந்த ஆண்டு ஜூலை 11ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவானாவது தள்ளுபடி செய்யப்பட்டு அதிமுக பொதுக்குழு செல்லும் எனும் வகையில் தீர்ப்பு வெளியானது.

தீர்மானங்கள் செல்லும் : பொதுக்குழு செல்லும் என்றால் அங்கு நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களும் செல்லும் எனவும், இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி எனவும், ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார் எனவும் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.

தேர்தல் ஆணையம் : மேலும், உச்சநீதிமன்ற தீர்ப்பை மேற்கோள் காட்டி, அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரிக்க கோரி இபிஎஸ் தரப்பில் இருந்து தேர்தல் ஆணையத்தை நாட நடவடிக்கை எடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஓபிஎஸ் கடிதம் : தற்போது, ஓ.பன்னீர்செல்வமும் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், ஜூலை 11 அன்று நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானங்களையும், கட்சி விதிகளில் செய்யப்பட்ட மாற்றங்களையும் ஏற்றுக்கொள்ள கூடாது என தேர்தல் ஆணையத்திற்கு ஓபிஎஸ் கடிதம் எழுதியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்