ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் – இன்றுடன் ஓய்கிறது பிரச்சாரம்..!

Default Image

இன்று மாலை 5 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவடைகிறது. 

ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற இன்னும் ஒரு சில நாட்களே உள்ளது. இந்த நிலையில், அங்கு தேர்தல் களம் பரபரப்பாக காணப்படுவதோடு, வாக்கு சேகரிக்கும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இன்றுடன் ஓய்கிறது பிரச்சாரம் 

இந்த நிலையில், இன்று மாலை 5 மணிக்குள் அனைத்து கட்சி மற்றும் நட்சத்திர பேச்சாளர்களும் தங்கள் பிரச்சாரத்தை நிறுத்திவிட்டு, மாலை 6 மணிக்குள் அனைவரும் வெளியேற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. 6 மணிக்கு மேல் வெளியூர் நபர்கள் யாரும் தேர்தல் நடைபெறும் தொகுதியில் இருக்க கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ள்ளது.

மேலும், இன்று மாலை 6 மணி முதல் தேர்தல் விவகாரங்ளை சமூக வலைத்தளங்களில் வெளியிட தடை , தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புக்கு தடை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்