உச்சநீதிமன்ற தீர்ப்பு எடப்பாடி பழனிசாமிக்கு முழுமையான வெற்றியல்ல – ஓபிஎஸ் ஆதரவாளர் திருமாறன்

Default Image

சிவில் வழக்கு மூலம் சட்டப்போராட்டம் நீடிக்கும் என ஓபிஎஸ் ஆதரவாளர் திருமாறன் பேச்சு. 

அதிமுக பொதுக்குழு வழக்கிற்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் அணியினர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்த நிலையில், உச்சநீதிமன்ற நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, சஞ்சய் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு, 2022, ஜூலை 11ஆம் தேதி எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லும் என தீர்ப்பளித்துள்ளனர்.

இதனையடுத்து, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து, இபிஎஸ் புகைப்படத்திற்கு பாலபிஷேகம் செய்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

சட்டப்போராட்டம் நீடிக்கும்

இந்த தீர்ப்பு குறித்து ஓபிஎஸ் ஆதரவு வழக்கறிஞர் திருமாறன், உச்சநீதிமன்ற தீர்ப்பு எடப்பாடி பழனிசாமிக்கு முழுமையான வெற்றியல்ல. சிவில் வழக்கு மூலம் சட்டப்போராட்டம் நீடிக்கும் என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்