ஊரடங்கு காலம் – பணிக்காலமாக அறிவித்து அரசாணை வெளியீடு!

Default Image

கொரோனா ஊரடங்கு காலத்தில் பணிக்கு வராத நாட்களை பணிக்காலமாக அறிவித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு.

கொரோனா ஊரடங்கு காலத்தில் அரசு ஊழியர்கள் பணிக்கு வராத காலத்தை பனிக்காலமாக அறிவித்து அரசாணை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு அரசு. அதன்படி, 2021 மே 10 முதல் ஜூலை 4 வரை ஊரடங்கு காலத்தில் அரசு ஊழியர்களுக்கு சிறப்பு விடுப்பு அறிவித்து அரசனை வெளியாகியுள்ளது. தகுதியுள்ள அல்லது சிறப்பு விடுப்பு அனுமதித்து அரசாணை வெளியிட்டுள்ளது தமிழக அரசு. கடந்த 2019ம் ஆண்டு சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் பரவி சமூக பொருளாதார இழப்பை அதிகளவில் ஏற்படுத்தியது.

tngovt18

இந்தியாவிலும் சுமார் 3 ஆண்டுகள் கொரோனா வைரஸ் பரவலால் பல்வேறு இழப்புகளை சந்திக்க நேர்ந்தது.  இதனால் தமிழகம் உள்ளிட நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அரசுப் பணியாளர்கள் உட்பட அனைத்து தரப்பினருக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது. கிட்டதட்ட ஒரு மாதத்திற்கும் மேலாக அரசு ஊழியர்கள் பணிக்கு வராமல் இருந்தனர். இதனால் கொரோனா காலத்தில் அரசு ஊழியர்கள் பணிக்கு வராத நாட்களை பணிக்காலமாக அறிவிக்க அரசு ஊழியர்கள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், இதனை ஏற்ற தமிழக அரசு, கொரோனா ஊரடங்கு காலத்தில் பணிக்கு வராத நாட்களை பணிக்காலமாக அறிவித்து அரசாணை வெளியாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்