மாணவர்களுக்கு நற்செய்தி: 90 ஆயிரம் இலவச பேருந்து அட்டைகள் வழங்கல் ..!

ஈரோடு மாவட்டத்தில் நடப்பு கல்வியாண்டில் சுமார் 90 ஆயிரம் பேருக்கு அரசின் சார்பில் இலவசப் பேருந்து பயண அட்டை விநியோகிக்கப்படவுள்ளதாக போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழகத்தில் பள்ளி மற்றும் அரசு கலை, அறிவியல் கல்லூரிகள், அரசு பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பயின்று வரும் மாணவ, மாணவிகளுக்கு அரசின் சார்பில் இலவசப் பேருந்து பயண அட்டை வழங்கும் திட்டம் நடைமுறையில் உள்ளது. அதன்படி கடந்த கல்வி ஆண்டில் (2017-18) அரசுப் பள்ளி, கல்லூரி, பாலிடெக்னிக், தொழில்பயிற்சி நிலைங்களில் பயிலும் 22.66 லட்சம் பேருக்கு இலவச பயண அட்டைகள் வழங்கப்பட உள்ளது.  இந்நிலையில், நடப்பு கல்வி ஆண்டில் இன்று (1ஆம் தேதி)பள்ளிகள் திறக்கப்படுமென அரசு அறிவித்துள்ளது.

ஈரோடுமாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், நகராட்சி, நடுநிலைப் பள்ளிகள் உள்பட 243 பள்ளிகளில் சுமார் 1 லட்சம் மாணவ, மாணவிகள் பயின்றுவருகின்றனர். இவர்களில் 86,360 மாணவ, மாணவிகளுக்கு கடந்த கல்வி ஆண்டில் இலவச பேருந்து பயணஅட்டை வழங்கப்பட்டது. நடப்பாண்டில் இந்த எண்ணிக்கை சுமார் 5 ஆயிரம் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதால் சுமார் 90 ஆயிரம் இலவச பேருந்து பயண அட்டைகள் விநியோகிக்கப்படலாம் போக்குவத்துக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment