சுதந்திர போராட்ட தியாகிகள் சிலையை இன்று திறந்து வைக்கிறார் முதலமைச்சர்!

Default Image

விடுதலைப் போராட்ட வீரர்களான மருது பாண்டியர்கள், வீரபாண்டிய கட்டபொம்மன், வ.உ.சிதம்பரனார் சிலைகளை திறந்து வைக்கிறார் முதலமைச்சர்.

சென்னை கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள சுதந்திர போராட்ட தியாகிகளின் சிலைகள் இன்று திறக்கப்படுகிறது. சுதந்திர போராட்ட தியாகிகளின் மார்பளவு சிலைகளை முதலமைச்சர் முக ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார். செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் மருதுபாண்டியர்கள், வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. மேலும், வ.உ.சிதம்பரனார் கோவை சிறையில் இழுத்த பொலிவூட்டப்பட்ட செக்கு, வ.உ.சி.யின் மார்பளவு சிலை நிறுவப்பட்டுள்ளது.

freedomfighterssatue

தமிழ்நாடு அரசு இதுதொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அரசு சார்பில் சுதந்திரப் போராட்ட வீரர்களான மருது பாண்டியர்களுக்கு ரூ.34 லட்சத்திலும், வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு ரூ.18 லட்சத்திலும், ரூ.43 லட்சத்தில் வ.உ.சிதம்பரனார் கோவை சிறையில் இழுத்த செக்கு பொலிவூட்டப்பட்ட சிலையும், அவரது மார்பளவு சிலையும் நிறுவப்பட்டுள்ளது. காலை 11 மணிக்கு தலைமைச் செயலகத்தில் காணொலிக் காட்சி வாயிலாக சுதந்திர போராட்ட தியாகிகளின் சிலைகளை முதலமைச்சர் திறந்து வைக்கிறார். மேலும், பல சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் சிலைகள் நிறுவ அடிக்கல் நாட்டுகிறார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்