சென்னை பெரம்பூர் 9 கிலோ தங்க நகை கொள்ளை.! கொள்ளையர்களின் காரை பறிமுதல் செய்த போலீசார்.!

Default Image

சென்னை பெரம்பூர் பகுதியில் நகை கொள்ளையில் ஈடுப்பட்ட கொள்ளையர்கள் பயன்படுத்திய கார் தற்போது போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டது. 

கடந்த 10ஆம் தேதி சென்னை, பெரம்பூரில் உள்ள ஓர் தனியார் நகைக்கடையில் 9 கிலோ தங்க நகைகள் மற்றும் 20 லட்சம் ரூபாய் ,மதிப்புள்ள வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. 9ஆம் தேதி கடை அடைக்கப்பட்டு சென்ற பின்னர் நள்ளிரவில் புகுந்த கொள்ளையர்கள் வெல்டிங் மிஷின் வைத்து ஷட்டரை உடைத்து உள்ளே புகுந்து, பின்னர் லாக்கரில் உள்ள தங்க நகைகளை கொள்ளையடித்தனர்

6 தனிப்படை : இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக பெரம்பூர் மற்றும் வியாசர்பாடி பகுதி போலீசார் தனிப்படை அமைத்து நகை கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டதில் 1 பிரிவினர் பெங்களூருவுக்கும், 1 பிரிவினர் ஹைதிராபாத்திற்கும் சென்றனர்.

3 மாநில போலீசார் : இந்த கொள்ளை சம்பவ விசாரணையில் தமிழ்நாடு, ஆந்திரா, கேரள மாநில போலீசார் ஈடுப்பட்டு தீவிர வாகன சோதனையில் ஈடுப்பட்டனர். இதில் முதற்கட்டமாக தற்போது சிசிடிவி காட்சிகள் மூலம் தற்போது கொள்ளை சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட இன்னோவா கார் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கார் பறிமுதல் : காவல்துறையினர் மேலும் கூறுகையில், தற்போது கொள்ளையர்கள் பற்றிய முக்கிய தடையங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், குற்றவாளிகளை நெருங்கிவிட்டதாகவும், விரைவில் கொள்ளையர்கள் பிடிபடுவார்கள் எனவும் காவல்துறை தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்