சிப்ரஸின் புதிய அதிபராக நிகோஸ் கிறிஸ்டோடூலிட்ஸ் தேர்வு.!

Default Image

சிப்ரஸின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் நிகோஸ் கிறிஸ்டோடூலிட்ஸ், அந்நாட்டு அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

நேற்று நடந்த சிப்ரஸ் நாட்டின் அதிபர் தேர்தலில் நிகோஸ் கிறிஸ்டோடூலிட்ஸ், இரண்டாவது மற்றும் இறுதி சுற்று வாக்குப்பதிவுக்குப் பிறகு, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட ஆண்ட்ரியாஸ் மவ்ரோயானிஸ்-ஐ தோற்கடித்து 51.9% வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார். ஆண்ட்ரியாஸ் மவ்ரோயானிஸ் 48.1% வாக்குகளைப் பெற்றிருந்தார்.

ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த ஜனாதிபதி தேர்தலில் ஆளும் DISY கட்சியின் நிகோஸ் அனஸ்டாசியாட்ஸ், 2013 முதல் ஆட்சியில் இருந்து வருகிறார், 2018 இல் அவர் மீண்டும் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். சட்டப்படி, அவர் மூன்றாவது முறையாக பதவியேற்க முடியாது. அதன்பிறகு தற்போது நடந்த அதிபர் தேர்தலில் 49 வயதான கிறிஸ்டோடூலிட்ஸ் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கிறிஸ்டோடூலிட்ஸ் 2022 ஆம் ஆண்டு வரை சிப்ரஸின் வெளியுறவு அமைச்சராக இருந்துவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்