அல்-கொய்தா.. ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு.? மும்பை, பெங்களூருவில் தீவிர சோதனை.!

மும்பை மற்றும் பெங்களூரு பகுதிகளில் பயங்கரவாத அமைப்புகளோடு தொடர்புடையதாக கருதப்படும் பல்வேறு இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். 

தேசிய புலனாய்வு அமைப்பண என்ஐஏ (NIA) இந்தியாவில் பல்வேறு இடங்களில் சோதனைகளை மேற்கொண்டு வருகிறது. இந்தியாவில் தடை செய்யப்பட்ட அமைப்புகளோடு தொடர்புடையதாக கருதப்படும் பலரிடம் இந்த சோதனையை அவ்வப்போது என்ஐஏ அமைப்பு மேற்கொண்டு வருகிறது.

தற்போது பெங்களூரு மற்றும் மும்பை ஆகிய பகுதிகளில் தேசிய புலனாய்வு அமைப்பினர் சோதனை நடத்தி வருகின்றனர். உலக பயங்கரவாத அமைப்புகளான அல்-கொய்தா மற்றும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்புடையதாக கருதப்படும் சிலரது இடங்களில் அதிகாரிகள் தீவிர சோதனை நடைபெற்று வருகிறது.

சந்தேகப்படும் நபர்களிடமிருந்து செல்போன், லேப்டாப் உள்ளிட்ட சாதனங்கள் மற்றும் ஆவணங்களை என்ஐஏ அதிகாரிகள் கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர். இவர்களுக்கு பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடையதாக என்ஐஏ தரப்பில் இருந்து சந்தேகிக்கப்படுகிறது. இவர்கள் யார் யாரென்று விவரம் வழக்கம்போல் வெளியாகவில்லை.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment