ஜார்கண்ட் : அபார்ட்மெண்டில் பயங்கர தீ விபத்து..! 14 பேர் பலி..!

Default Image

ஜார்கண்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர்.

ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் மாவட்டத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் கட்டிடத்தில் இருந்த 3 குழந்தைகள் உட்பட 14 பேர் உயிரிழந்தனர். பயங்கர தீ விபத்து குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். காவல் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினருக்கு சம்பவம் தொடர்பான தகவல் அனுப்பப்பட்டது.

Dhanbad Fire Accident (1)

மீட்பு துறையினர் விபத்து ஏற்பட்ட இடத்திற்கு வந்ததையடுத்து மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தீவிர மீட்புப் பணிகளுக்கு மத்தியில் தீயை அணைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் கட்டிடத்தில் பலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மீட்பு பணி தீவிரமாக நடந்து கொண்டிருப்பதால் கட்டிடத்தில் சிக்கியவர்களின் எண்ணிக்கையை சரிபார்க்க முடியவில்லை என்று மாவட்ட டிஎஸ்பி தெரிவித்தார்.

Dhanbad Fire Accident (2)

தீ விபத்தில் மீட்கப்பட்ட 18 பேரை அதிகாரிகள் அருகிலுள்ள பாட்லிபுத்ரா மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். மீட்புப் பணியை மேலும் தீவிரமாக்க அதிகாரிகள் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும், அதே நேரத்தில் தீ விபத்தில் சிக்கிய கட்டிடத்தில் கூட்டமாக திரண்டு வந்த உள்ளூர் மக்களிடம் தங்களுக்கு ஒத்துழைக்குமாறும் கேட்டுக் கொண்டனர். மேலும் தீ விபத்துக்கான காரணம் குறித்து உறுதியான தகவல்கள் எதுவும் கண்டறியப்படவில்லை என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்