ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல், அண்ணாமலை தலைமையில் பாஜக ஆலோசனை.!

Default Image

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக, அண்ணாமலை தலைமையில் பாஜக ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.

சென்னையிலுள்ள பாஜகவின் கட்சி தலைமையகமான கமலாலயத்தில் மாநிலத் தலைவர் அண்ணாமலையின் தலைமையில் பாஜக, மாநில- மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக பாஜகவின் நிலை குறித்து இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.

ஏற்கனவே அதிமுகவில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் என இரு தரப்பினரும் பாஜகவின் ஆதரவுக்காக தனித்தனியாக சென்று சந்தித்துள்ளனர். மேலும் இந்த இடைத்தேர்தலில் பாஜக தனித்து நிற்கப்போகிறதா அல்லது அதிமுகவிற்கு ஆதரவு அளிக்கப்போகிறதா என்பது குறித்தும் இந்த ஆலோசனை நடைபெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாஜக மாநில பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, கட்சியின் சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோரும் இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்