ஒடிசாவின் புதிய சுகாதார துறை அமைச்சர் நியமனம்..!

Default Image

ஒடிசாவில் புதிய சுகாதாரத்துறை அமைச்சராக நிரஞ்சன் பூஜாரி நியமிக்கப்பட்டுள்ளார்.

ஒடிசாவின் சுகாதார அமைச்சர் நபா கிசோர் தாஸ், சுட்டு கொல்லப்பட்டதையடுத்து புதிய சுகாதாரத் துறை அமைச்சராக நிரஞ்சன் பூஜாரி நியமிக்கப்பட்டுள்ளார். ஒடிசாவில் சுகாதாரத்துறை அமைச்சர் சுட்டு கொல்லப்பட்டதையடுத்து ஒடிசாவில் நிதியமைச்சர் நிரஞ்சன் பூஜாரிக்கு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறையின் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது.

Niranjan Pujari 1

இவரது நியமனம் முதல்வர் அலுவலகத்தில் ஆளுநர் பேராசிரியர் கணேஷி லாலின் ஒப்புதலுடன், முதல்வர் நவீன் பட்நாயக், நிதியமைச்சர் நிரஞ்சன் பூஜாரிக்கு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறையை ஒதுக்கினார். நாடாளுமன்றத்தின் விவகாரத்துறையின் பொறுப்புகளையும் கவனித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Niranjan Pujari

அமைச்சர் நபா தாஸ் மரணம் :

ஒடிசாவில் சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் நபா கிஷோர் தாஸ், ஜார்சுகுடா மாவட்டத்தின் பிரஜ்ராஜ்நகரில் நடந்த நிகழ்ச்சிக்கு சென்று கொண்டிருந்தார். நிகழ்ச்சில் கலந்துகொள்ள நபா தாஸ் தனது காரில் இருந்து இறங்கிய போது போலீஸ் உதவி ஆய்வாளர் ஒருவர் துப்பாக்கியால் அவரது மார்பில் சுட்டுள்ளார். இதனால் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சில மணி நேரங்களில் மரணமடைந்தார். ஒடிசா கவர்னர் கணேஷி லால், முதல்வர் நவீன் பட்நாயக் மற்றும் பல முக்கிய பிரமுகர்கள் மறைந்த அமைச்சர் நபா கிஷோர் தாஸ் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்