ஸ்டெர்லைட் போராட்டத்தில் சமூக விரோதிகள் நுழைந்ததே பிரச்சனைக்கு காரணம்!ரஜினிகாந்த் தகவல்

Default Image

காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் ஆறுதல் கூறினார் நடிகர் ரஜினிகாந்த்:

நடிகர் ரஜினிகாந்த் இன்று தூத்துக்குடி சென்றார்.துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்டோரின் குடும்பங்களை சந்தித்தார். காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் ஆறுதல் கூறினார் நடிகர் ரஜினிகாந்த்.அரசியல் பிரவேச அறிவிப்புக்கு பின்னர் முதல்முறையாக மக்கள் பிரச்னைக்காக களம் இறங்குகிறார் ரஜினிகாந்த். சென்னையிலிருந்து இன்று காலை ரஜினிகாந்த் தூத்துக்குடிக்கு புறப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினிகாந்த்  நிதி உதவி:

காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் நிதியும், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிதியும் வழங்குகினார்  நடிகர் ரஜினிகாந்த்.தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் 48 பேரை சந்தித்து நலம் விசாரித்தார் ரஜினிகாந்த்.

நலம் விசாரித்த பின்  செய்தியாளர் சந்திப்பில் ரஜினிகாந்த் கூறியது:

தூத்துக்குடி போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுறுவியுள்ளனர் சமூக விரோதிகளை இரும்புக்கரம் கொண்டு ஜெயலலிதா அடைக்கி வைத்திருந்தார்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தையும், ஸ்டெர்லைட் ஆலை ஊழியர்களின் குடியிருப்புகளை எரித்தது பொதுமக்கள் இல்லை; சமூக விரோதிகளே என்று ரஜினிகாந்த் குற்றம்சாட்டியுள்ளார்.

பலத்த போலீஸ் பாதுகாப்பு:

இதேபோல் நடிகர் ரஜினிகாந்த் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு வருவதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனையில் இருந்து ரசிகர்கள், நோயாளிகளின் பார்வையாளர்களை போலீசார் வெளியேற்றினர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்