சட்டமன்ற மற்றும் நாடாளுமன்றத் தேர்தல் ஒரே நேரத்தில் நடத்துவது எந்த வகையில் சாத்தியம் – முத்தரசன்
சட்டமன்ற மற்றும் நாடாளுமன்றத் தேர்தல் ஒரே நேரத்தில் நடத்துவது எந்த வகையில் சாத்தியம் என முத்தரசன் பேட்டி.
ஈரோட்டில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், ஒரே நாடு ஒரே தேர்தல் வேகமாக பிஜேபியால் முன்வைக்கப்படுகிறது, இது சாத்தியமற்றது என அனைவருக்கும் தெரியும்.
சட்டமன்ற மற்றும் நாடாளுமன்றத் தேர்தல் ஒரே நேரத்தில் நடத்துவது எந்த வகையில் சாத்தியம். ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில், கூட்டணி தர்மத்தின் அடிப்படையில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட நிலையில் கம்யூனிஸ்ட் கட்சி முழு ஆதரவு அளிக்கும்; காங்கிரஸ் கட்சி வேட்பாளர் வெற்றிக்கு நாங்கள் பாடுபடுவோம் என தெரிவித்துள்ளார்.