ராஜஸ்தானில் ஓடும் ரயிலில் சிறுமியின் உடலை வீசிய காதலர்கள்..!
ராஜஸ்தான் மாநிலத்தில் ஓடும் ரயிலில் இருந்து சிறுமியின் உடலை வீசிய காதலர்களை போலீசார் கைது செய்தனர்.
ராஜஸ்தானின் ஸ்ரீகங்காநகர் மாவட்டத்தில் தனது மூன்று வயது சிறுமியைக் கொன்று ஓடும் ரயிலில் இருந்து உடலை வீசிய திருமணமான பெண்ணும் அவரது காதலரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் திருமணமான சுனிதா மற்றும் அவரது காதலர் மால்டா என்ற சன்னி என அடையாளம் காணப்பட்டுள்ளனர். விசாரணையில் சுனிதாவிற்கு ஐந்து குழந்தைகள் இருப்பது தெரியவந்தது. சுனிதா மற்றும் சன்னி தனது இரண்டு மகள்களுடன் சாஸ்திரி நகரில் வசிக்கின்றனர். அதேசமயம் மற்ற மூன்று குழந்தைகளும் சுனிதாவின் கணவருடன் இருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
சுனிதா தனது மகள் கிரணை கழுத்தை நெரித்து கொன்றதாகவும் பின்னர் சன்னியின் உதவியுடன் ஒரு பெட்ஷீட்டில் உடலைப் போர்த்திக்கொண்டு ரயிலில் இருந்து உடலை வீசியதாகவும் விசாரணையில் தெரிவித்தார். ரயிலில் இருந்து வீசப்பட்ட சிறுமியின் உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.