பெண் பயணி மீது சிறுநீர் கழித்த விவகாரம் – ஏர் இந்தியாவுக்கு ரூ.30 லட்சம் அபராதம்..!
விமானத்தில் பெண் பயணி மீது சிறுநீர் கழித்த விவகாரத்தில் ஏர் இந்தியாவுக்கு ரூ.30 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த நவம்பர் மாதம் அஜய் மிஸ்ரா என்பவர், நியூயார்க்கில் இருந்து டெல்லிக்கு ஏர் இந்தியா விமானத்தில் குடிபோதையில் வயதான பெண்மணி மீது சிறுநீர் கழித்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
இந்நிலையில், கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூரில் தலைமறைவாகி இருந்த சங்கர் மிஸ்ராவை டெல்லி போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
மேலும், அவர் பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்ட நிலையில், விமானத்தில் பயணம் செய்ய மேலும், 4 மாதங்களுக்கு தடை விதித்து அந்நிறுவனம் உத்தரவிட்டு இருந்தது.
இந்த நிலையில், சிறுநீர் கழித்த விவகாரத்தில் ஏர் இந்தியாவுக்கு ரூ.30 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் சம்பவத்தின் போது பணியில் இருந்த தலைமை விமானியின் உரிமத்தை மூன்று மாதங்களுக்கு நிறுத்தி வைக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.