ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் – எடப்பாடி பழனிசாமி ஆலோசனை..!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி ஆலோசனை.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள வீட்டில் கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் ஈபிஎஸ் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், தங்கமணி, திண்டுக்கல் சீனிவாசன், கே.பி.முனுசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் வேட்பாளரை தேர்வு செய்வது தொடர்பாகவும், உச்சநீதிமன்ற வழக்கு மற்றும் இரட்டை இலை சின்னம் தொடர்பாகவும் ஆலோசனை நடைபெறுவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.