கனியமூர் மாணவி செல்போனை நீதிமன்றம் ஏற்க மறுப்பு.! சிபிசிஐடியிடம் ஒப்படைக்க உத்தரவு.!

Default Image

கனியமூர் பள்ளி மாணவியின் செல்போனை சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்க விழுப்புரம் நீதிமன்றம் உத்தரவிட்டது. 

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியமூர் தனியார் பள்ளியில் பயின்றுவந்த மாணவி உயிரிழந்த விவகாரம் தொடர்பான வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இந்த வழக்கு விசாரணைக்காக மாணவி பயன்படுத்திய செல்போனை ஒப்படைக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.

ஆனால், உயிரிழந்த மாணவியின் பெற்றோர் சிபிசிடியிடம் செல்போனை ஒப்படைக்க மறுத்து விழுப்புரம் நீதிமன்றத்தில் ஒப்படைக்க முன் வந்தனர். ஆனால், மனைவியின் செல்போனை விழுப்புரம் நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது.

உயர்நீதிமன்ற உத்தரவை சுட்டிக்காட்டி, மாணவியின் செல்போனை சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்க விழுப்புரம் நீதிமன்றம் உத்தரவிட்டது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்