ஈரோடு இடைத்தேர்தலில் அமமுக நிலைப்பாடு – 27-ஆம் தேதி அறிவிப்பு..!
ஜனவரி 27ஆம் தேதி மற்றொரு ஆலோசனைக் கூட்டம் நடத்திய பின்னர் அமமுக நிலைப்பாடு குறித்து அறிவிக்கப்படும்
ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த திருமகன் ஈவேரா மறைவையடுத்து இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. அதன்படி, பிப்-27ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறும் எனதேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக டிடிவி தினகரன் அவர்கள் ஆலோசனை மேற்கொண்ட பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத் தேர்தலில் திமுகவை வீழ்த்த வேண்டும் என்பதே அமமுகவின் எண்ணம். அதற்கான அனைத்து முயற்சிகளையும் அமமுக மேற்கொள்ளும்.
மேலும், எதிர் வரும் ஜனவரி 27ஆம் தேதி மற்றொரு ஆலோசனைக் கூட்டம் நடத்திய பின்னர் அமமுக நிலைப்பாடு குறித்து அறிவிக்கப்படும். இடைத்தேர்தலில் நான் கூட போட்டியிட வாய்ப்பு உள்ளது என தெரிவித்துள்ளார்.