ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் – தினகரன் ஆலோசனை
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், டிடிவி தினகரன் ஆலோசனை.
ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த திருமகன் ஈவேரா மறைவையடுத்து இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. அதன்படி, பிப்-27ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறும் எனதேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்த நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் குறித்து டிடிவி தினகரன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த அமமுக நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.