100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் தனுஷின் புதுப்படம்.! வெளியான ரகசிய தகவல்.!

Default Image

நடிகர் தனுஷ் தற்போது ‘வாத்தி’ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் வரும் ஏப்ரல் 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷ் அடுத்ததாக ‘கேப்டன் மில்லர்’ எனும் படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்திற்கான படப்பிடிப்பு மும்மரமாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் மீதும் பெரிய எதிர்பார்ப்புகள் உள்ளது. மிகப்பெரிய பொருட்செலவில் படம் உருவாகி வருகிறது. இதற்கிடையில், தனுஷ் நடிக்கும் 50-வது திரைப்படத்திற்கான அறிவிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது.

அந்த அறிவிப்பில், தனுஷின் 50-வது திரைப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், படத்தை யார் இயக்க போகிறார் யார் யார் நடிக்க போகிறார்கள் என்ற என்ற விவரம் அறிவிக்கப்படவில்லை.

ஒரு பக்கம் இது வடசென்னை படத்தின் இரண்டாவது பாகம் எனவும், மற்றோரு பக்கம் இது தனுஷ் இயக்கப்போகும் படம் எனவும் கருத்துக்களை கூறி வருகிறார்கள். இதற்கிடையில் ஆச்சரியமூட்டும் ஒரு தகவல் ஒன்று இணையத்தில் கசிந்துள்ளது. அது என்னவென்றால், தனுஷ் சினிமா கேரியரிலில் இதுவரை இல்லாத அளவிற்கு கிட்டத்தட்ட 100 கோடி பட்ஜெட்டில் இந்த படம் உருவாகவுள்ளதாம்.

எனவே இதன் மூலம் தனுஷின் 50 -வது படம் மிகவும் பிரமாண்டமாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. விரைவில் இந்த படத்தை அவரே இயக்கி அவர் நடிக்கிறாரா..? அல்லது வடசென்னை 2 படமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்