திருமண ஊர்வலத்தில் நடந்த சோகம்..! வெளியான அதிர்ச்சி வீடியோ..!

Default Image

மத்தியப் பிரதேசத்தில் நடந்த திருமண ஊர்வலத்தில் நடனமாடிக்கொண்டிருந்த நபர் மாரடைப்பில் உயிரிழந்தார்.

மத்தியப் பிரதேசத்தில் நடைபெற்ற திருமண ஊர்வலத்தில் நடனமாடி கொண்டிருந்த 32 வயதான அபய் சச்சன் என்பவர் திடீரென மாரடைப்பில் இறந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கான்பூரை சேர்ந்த அபய் தனது நண்பனின் திருமணத்தில் கலந்துகொள்ள மத்தியப் பிரதேசத்தில் உள்ள ரேவாவிற்கு வந்துள்ளார்.

இரவு 12 மணி அளவில் அனைவரும் ஊர்வலமாகப் பாடியும் நடனமாடியும் ரேவாவில் உள்ள அமர்தீப் பேலஸிற்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது செல்லும் வழியில் நடனமாடிக்கொண்டிருந்த அபய் திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் தனது நெஞ்சை பிடித்துக்கொண்டவாறு கீழே விழுந்தார். இதனையடுத்து அபய் ரேவாவில் உள்ள சஞ்சய் காந்தி நினைவு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த தகவலை அறிந்த அபயின் குடும்பத்தினர் மருத்துவமனைக்கு வந்தனர். அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் கொண்டாட்டம் நிறைந்த திருமண விழா சோகமாக மாறியது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்