தமிழர்களை சுரண்டி பார்த்தால் தீக்கங்கு வெளியாகும் – கனிமொழி எம்.பி
தமிழர்கள் சாதாரணமாக தான் இருப்பார்கள். ஆனால் சுரண்டி பார்த்தால் தான் தீக்கங்கு வெளியாகும் என கனிமொழி எம்.பி பேச்சு.
கியூபா ஆதரவு ஒருமைப்பாட்டு விழா மற்றும் புரட்சியாளர் சேகுவாராவின் மகள் அலெய்டா மற்றும் பேத்தி பேராசிரியர் டாக்டர் எஸ்டெஃபானி குவேரா ஆகியோரை வரவேற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி ஆனது சென்னை பாரிஸ் கார்னர் ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றிய திமுக எம்பி கனிமொழி அவர்கள், தமிழர்கள் சாதாரணமாக தான் இருப்பார்கள். ஆனால் சுரண்டி பார்த்தால் தான் தீக்கங்கு வெளியாகும் என்பதை புரிந்து கொண்டிருக்கிறார்கள். எனக்கு முன்பு பேசிய ஆசிரியர் கீ.வீரமணி தமிழ்நாடு என்ற வார்த்தையை சொல்லும்போது பலத்த கைதட்டல் எழுந்தது.இங்கு எழுந்த புரட்சிதான் இன்று நான் அப்படி சொல்லவே இல்லை. நான் சொன்னது தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது என்றெல்லாம் சொல்ல வைத்திருக்கிறது என்று பேசினார்.