இவர்கள் வீட்டில் இருந்தே வாக்களிக்கலாம் – திரிபுராவின் தலைமை தேர்தல் அதிகாரி
சட்டமன்ற தேர்தலில் 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வீட்டில் இருந்தே வாக்களிக்கலாம் என திரிபுராவின் தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்
திரிபுராவில் 2023 சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு பிப்ரவரி 16 ஆம் தேதி நடைபெறும் என்றும், சட்டசபை தேர்தல் முடிவுகள் மார்ச் 2ம் தேதி அறிவிக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வீட்டில் இருந்தே வாக்களிக்கலாம் என திரிபுராவின் தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். மேலும், மாநிலத்தில் நடைபெறவுள்ள தேர்தலுக்காக, மத்திய ஆயுதப்படை துணை ராணுவப் படையினர் (சிஏபிஎஃப்) போதுமான எண்ணிக்கையில் இங்கு வந்துள்ளதாகவும், கொடி அணிவகுப்பு மற்றும் இரவு ரோந்துப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், திரிபுரா முதல்வர் மாணிக் சாஹா, வரும் பிப்ரவரி 16ஆம் தேதி நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் முன்பை விட அதிக தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.