‘மீண்டும் தேர்தலில் போட்டியிடமாட்டேன்’ – ராஜினாமாவை அறிவித்த நியூசிலாந்து பிரதமர்..!
நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் அடுத்த மாதம் ராஜினாமா செய்யப்போவதாக அறிவிப்பு.
நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் அடுத்த மாதம் ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்துள்ளார். ஐந்தரை ஆண்டுகளாக இந்த பதவியில் நீடித்த நிலையில், இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த ஆண்டு அக்டொபரில் நடைபெறவுள்ள தேர்தலில் மீண்டும் போட்டியிடப்போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “இந்த பதவி குறித்து நன்கு அறிவேன், இனி இதை தொடர என்னிடம் போதுமான ஆற்றல் இல்லை என்பதை உணர்கிறேன்” என தெரிவித்துள்ளார். ஜெசிந்தா ஆர்டெர்ன், 2017 ஆம் ஆண்டில் 37 வயதில் பிரதமராக பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.