ஆளுநருக்கு, திராவிட அரசியல் மீது காழ்ப்புணர்வு- திருமாவளவன்
திராவிட அரசியல் மீது ஆளுநர் ரவிக்கு, காழ்ப்புணர்வு இருப்பதன் வெளிப்பாடு தான் இவ்வாறு பேசுவதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு என்ற பெயர் ஏற்கனவே சட்டபூர்வமாகவும், அதிகாரபூர்வமாகவும் நடைமுறையில் இருக்கிறது. ஆனால் ஆளுநர் ரவி, இதனை விவாதத்திற்குள்ளாக்கி பேசியது, அவருக்கு திராவிட அரசியல், தமிழ் தேசிய அரசியல் மற்றும் மொழி, இனம் மீதுள்ள காழ்ப்புணர்வு தான் காரணம், இது தான் அவருக்குள் ஊறிப்போன அரசியல் என்று திருமாவளவன் கூறியுள்ளார்.
ஆளுநரின் கருத்து சர்ச்சையாகிய நிலையில், அவர் தற்போது தான் கூறியது தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டது என்று அதற்கு விளக்கம் அளித்துள்ளது, திரிபு வாதம் என்றும் அவர் ஆரம்பத்தில் கூறியது குதர்க்க வாதம் என்றும், சென்னையில் நடைபெற்ற சிபிஐ கட்சியின் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய திருமாவளவன் தெரிவித்துள்ளார்.